தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவல் – அமைச்சர் தகவல்!!

0
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவல் - அமைச்சர் தகவல்!!
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவல் - அமைச்சர் தகவல்!!
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவல் – அமைச்சர் தகவல்!!

தமிழகத்தில் கொரோனா பரவல் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் தகவல் அளித்துள்ளார். அதே போல, இன்புளூயன்சா வைரஸும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்

இந்தியாவில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பரவல் பாதிப்புகள் ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், நேற்று (மார்ச் 20) ஒரு நாளில் மட்டும் கொரோனா புதிய பாதிப்புகள் 918 ஆக பதிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில், தமிழகத்திலும் தற்போது கொரோனா பரவல் புதிய பாதிப்புகளை ஏற்படுத்தத் துவங்கி இருக்கிறது. மேலும், இன்புளூயன்சா வைரஸ் தாக்கம் காரணமாக பலர் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

UPSC CGS 2023 தேர்வு முடிவு வெளியீடு – முக்கிய தகவல்கள் இதோ!!

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல் அளித்துள்ளார். இது குறித்து தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு பேசிய அவர், தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் 2 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இப்போது 76 ஆக அதிகரித்துள்ளது. மேலும், H3N2 காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 15 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!