TNPSC குரூப் 4 காலிப்பணியிடங்கள் 10,117 ஆக அதிகரிப்பு – முக்கிய உத்தரவு!!
TNPSC தேர்வாணையம் குரூப் 4 பதவிகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை 10,117 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு முன்னதாக இந்த பணியிடங்களுக்கான எண்ணிக்கை 7 ஆயிரமாக இருந்தது.
காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு
தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 பணியிடங்களுக்கான எண்ணிக்கையை அதிகரித்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், சுமார் 7000 ஆக அறிவிக்கப்பட்ட குரூப் 4 பதவிகளுக்கான எண்ணிக்கை தற்போது 10,117 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட காலியிட அட்டவணைப்படி, கிராம நிர்வாக அலுவலர் பணிகள் 274 லிருந்து 425 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போல, இளநிலை உதவியாளர் பணிகள் 4,952 ஆகவும், தட்டச்சர் பதவியில் 3311 பணியிடங்கள், ஸ்டெனோ தட்டச்சர் பதவியில் 1176 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவல் – அமைச்சர் தகவல்!!
இதற்கு முன்னதாக, குரூப் 4 பதவிகளில் காலியாக இருக்கும் 7,381 பணியிடங்களுக்கு TNPSC தேர்வாணையம் போட்டித்தேர்வுகளை நடத்தி இருந்தது. அந்த வகையில் கடந்த ஆண்டு மே மாதம் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில், குரூப் 4 பணிகளுக்கான பதவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தது. இதனை கவனத்தில் கொண்டு குரூப் 4 பதவிகளுக்கான எண்ணிக்கையை 7,381 லிருந்து 10,117ஆக அதிகரிப்பதாக TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது.