தமிழக நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.14,000/- சம்பளத்தில் வேலை!
துணை செவிலியர் பணியிடங்களை நிரப்ப தென்காசி மாவட்டம் – மேலக்கடையநல்லூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணை செவிலியர் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
- விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 01-03-2023 தேதியின்படி 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Training Course in multipurpose Health Worker தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.14,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ இணைப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, அதனை நாளைக்குள் செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் தலைவர்.மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட அட்சித் தலைவர், தென்காசி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.