ரூ.14,000/- சம்பளத்தில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!
தென்காசி மாவட்டம் – மேலக்கடையநல்லூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள Auxiliary Nurse Midwife எனப்படும் துணை செவிலியர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 23.03.2023 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | தென்காசி மாவட்ட நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் |
பணியின் பெயர் | துணை செவிலியர் |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 23.03.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
ஆரம்ப சுகாதார நிலைய காலிப்பணியிடங்கள்:
Auxiliary Nurse Midwife எனப்படும் துணை செவிலியர் பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது.
செவிலியர் வயது வரம்பு:
மாவட்ட சுகாதார சங்கம் தென்காசி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 01-03-2023 தேதியின்படி 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் Training Course in multipurpose Health Worker தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
சம்பள விவரம்:
மேற்கண்ட பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.14,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
https://tenkasi.nic.in/notice_category/recruitment/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனை கீழே வழங்கி உள்ள முகவரிக்கு வரும் 23/03/2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TNPSC திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு அட்டவணை 2023 – வெளியீடு!
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் தலைவர்.மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும்
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
மாவட்ட அட்சித் தலைவர்,
தென்காசி மாவட்டம்