தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வெழுதியோர் கவனத்திற்கு – மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்!
தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 12ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியவர்களுக்கு வரும் 25ம் தேதி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண் சான்றிதழ்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் பள்ளி, கல்லூரிகளுக்கு மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது. இந்த நிலையில் அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் நிலையை கருத்தில் கொண்டு தேர்வுகள் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்தது. ஆனால் தொடர்ந்து தொற்று குறையாத நிலையில் நேரடி தேர்வுகள் நடத்த சூழல் நிலவியது. அதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது.
EPFO ஓய்வூதிய உயர்வு, வட்டி விகிதம் அதிகரிப்பு – மத்திய அரசின் குழு ஆலோசனை!
மேலும் 10, 11 , 12 ஆகிய வகுப்புகளுக்கு நடைபெறும் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. மதிப்பிட்டு முறையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் 12ம் வகுப்பு துணைக்கு தேர்வர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் நேரடி தேர்வு நடத்தப்பட்டது. தற்போது 12ம் வகுப்பு துணை தேர்வர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் நவம்பர் 25ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் சான்றிதழ் குறித்த விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.
தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5000 நிவாரணம் – பாஜக கோரிக்கை!
அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 11, 12 ஆகிய இரண்டு வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்படும். முழுமையாக தேர்ச்சி பெறாமல் ஏதேனும் ஒரு பாடத்தில் தோல்வியுற்றிருந்தால் 11, 12 இரு வகுப்புகளுக்கும் சேர்த்து ஒரே மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். பழைய திட்டத்தின் படி 1200 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதியவர்களுக்கு நிரந்தர பதிவு எண்ணுடன் ஒருங்கிணைந்த அசல் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். முழுமையாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு அவர்கள் தேர்ச்சி பெற்ற பாடங்களுக்கு மட்டும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.