தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5000 நிவாரணம் – பாஜக கோரிக்கை!
தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்களுக்கு நிவாரணமாக ரூ.5000 வழங்க வேண்டும் என 11 மாவட்டங்களில் பா.ஜ.க வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நிவாரணம்:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் கனமழையினால் பெரும் பாதிப்படைந்து வருகிறது. சாலைகளில் நீர் தேங்கியும், விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்கும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – அடுத்த வாரம் முக்கிய முடிவு!
புதுவையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் மக்களின் நலன் கருதி மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தலா 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் உள்ள பா.ஜ.,வின் 11 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – முக்கிய கோரிக்கை முன்வைப்பு!
அதில் தமிழக பா.ஜ., துணை தலைவர் வி.பி.துரைசாமி மற்றும் சிறப்பு அழைப்பாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மழை வெள்ள பாதிப்பை சரி செய்வதற்கு, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5,000 ரூபாய் நிவாரணத்தை உடனே அறிவித்து அரசு விரைவாக வழங்க வேண்டும் என்று துரைசாமி கூறியுள்ளார். தமிழக அரசு விரைவில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.