தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – முக்கிய கோரிக்கை முன்வைப்பு!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பொங்கல் தொகுப்பானது பொங்கல் தினம் வருவதற்கு ஓரிரு நாட்களில் விநியோகிக்கப்படும்.
பொங்கல் தொகுப்பு:
தமிழகத்தில் தமிழர் திருநாளான பொங்கல் தினத்தை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொங்கல் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்த அரசால் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ஆட்சியை பிடித்துள்ள திமுக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் நவ.24 வரை ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் – வானிலை அறிக்கை!
ரேஷன் ஊழியர்கள் பொங்கல் தொகுப்பு பொருட்களை நுகர்வோர் வாணிப கழகத்தால் ஒரு துணிப்பையில் போட்டு தைத்து வழங்க உத்தரவிடுமாறு வலியுறுத்தியுள்ளனர். ஏனென்றால் கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்று காரணமாக 14 வகை மளிகை பொருட்கள் அரசால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்ட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட மளிகை பொருட்கள் அனைத்தும் தனித்தனியாக வழங்கப்பட்டதால் அதனை ஒன்று சேர்த்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – பொதுமக்கள் முக்கிய கோரிக்கை!
இதனால் ரேஷன் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தது. மேலும் சில பொருட்கள் குறைவாக வந்திருந்தது. இந்த நிலை பொங்கல் தொகுப்பு வழங்குவதில் நிகாலாத வண்ணம் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து துணிப்பையில் தைத்து ரேஷன் கடைகளுக்கு அனுப்புமாறு ரேஷன் ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் வழக்கமாக வரும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களும் சரியான அளவில் வருவதில்லை. அதனால் அனைத்து பொருட்களும் சரியான அளவில் வரும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.