இந்தியாவில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – அடுத்த வாரம் முக்கிய முடிவு!
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி 3வது டோஸ் செலுத்துவது குறித்து தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப குழு அடுத்த வாரம் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது. அதன் பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி:
இந்தியாவில் கடந்த வருடம் முதல் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமெடுத்து பரவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதனை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கை அறிவித்தது. மேலும் பல்வேறு நோய் தடுப்பு பணிகளையும் மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகள் போன்ற 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் 2 டோஸ் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – முக்கிய கோரிக்கை முன்வைப்பு!
இதுவரை இந்தியா முழுவதும் 38 கோடி பேர் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 75 கோடி பேர் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தடுப்பூசிகள் பயன்பட்டால் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி முடிப்பதை மத்திய அரசு நோக்கமாக கொண்டு மத்திய மாநில அரசுகள் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசிக்கு இன்னும் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை.
தமிழகத்தின் நவ.24 வரை ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் – வானிலை அறிக்கை!
மத்திய அரசால் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த நிலையில் தற்போது 2 டோஸ் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி 3 டோஸ் செலுத்துவது குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது. இந்த தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப குழுவின் கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் 3ம் டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் 3ம் டோஸ் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.