EPFO ஓய்வூதிய உயர்வு, வட்டி விகிதம் அதிகரிப்பு – மத்திய அரசின் குழு ஆலோசனை!
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு (CBT), இன்று ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிப்பது, அடுத்த நிதியாண்டுக்கான வட்டி விகிதம் மற்றும் ஓய்வூதிய நிதி அமைப்புக்கான முதலீட்டு விருப்பங்களை விரிவுபடுத்துவது போன்ற விஷயங்களை முடிவு ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறது.
ஆலோசனைக் கூட்டம்:
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு (CBT) நவம்பர் 20, சனிக்கிழமையான இன்று தனது 229வது ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உறுப்பினர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிப்பது, வர இருக்கும் 2022ம் நிதியாண்டிற்கான வட்டி விகிதம் மற்றும் ஓய்வூதிய நிதி அமைப்புக்கான முதலீட்டு விருப்பங்களை விரிவுபடுத்துவது போன்ற விஷயங்களின் முடிவுகள் எடுக்க உள்ளது.
தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5000 நிவாரணம் – பாஜக கோரிக்கை!
மத்திய அறங்காவலர் குழு என்பது அரசு, தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு முத்தரப்பு அமைப்பாகும். இந்த குழுவின் முடிவுகளை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஏற்றுக் கொள்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் கடைசியாக நடைபெற்ற தொழிலாளர் அமைச்சர் தலைமையிலான அமைப்பின் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மத்திய தொழிற்சங்கங்கள் தற்போது ஓய்வூதிய நிதியினை ரூ.1,000 ஆக வழங்கி வருகிறது. இதை குறைந்தபட்சம் ரூ.6,000 வரை உயர்த்த வேண்டும் என்று கோரியுள்ள நிலையில், CBT இந்த எண்ணிக்கையை ரூ.3,000 ஆக உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தொழிலாளர்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தற்போது 1,000 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாக உயர்த்த பரிந்துரைத்தது. கடந்த 2014ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஓய்வூதியம் தற்போது போதுமானதாக இல்லை என்று ஓய்வூதிய குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், 2021 ம் நிதியாண்டிற்கு மார்ச் 4, EPFO வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஓய்வூதிய வட்டிவிகிதம் 8.5% ஆனது அதிகரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஓய்வூதிய தொகையினை தனியார் துறை பத்திரங்கள், REITகள், அழைப்பிதழ்கள் போன்றவற்றில் முதலீடு செய்ய ஆலோசிக்கப்படுகிறது.
இந்தியாவில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – அடுத்த வாரம் முக்கிய முடிவு!
தற்போது, EPFO அதன் அதிகரிக்கும் நிதியில் 45-50% வரை அரசுப் பத்திரங்களிலும், 35-45% கடன் வழங்கும் நிறுவனங்களில், 5-15% பங்கு சந்தையிலும், மற்றும் 5% வரை குறுகிய காலக் கருவிகளிலும், 5% வரை சொத்துக்களிலும் முதலீடு செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.