தமிழகத்தில் 10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் – கல்வித்துறை இன்று முக்கிய ஆலோசனை!!
தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது.
பொதுத்தேர்வு ஆலோசனை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. தற்போது 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது. பிற மாணவர்களுக்கு ஆன்லைன், கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இதற்கிடையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3ம் தேதி முதல் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டு உள்ளது.
பிப்ரவரி 28 வரை பள்ளிகளை மூட உத்தரவு – கொரோனா பரவல் எதிரொலி!!
பள்ளி மாணவர்களுக்கு விரைவில் பாடத்திட்டங்களை நடத்தி முடிக்க வேண்டி உள்ளதால், வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் எடுக்கப்படுகிறது. இந்நிலையில் 10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகள் குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இத்தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இக்கூட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா? மாவட்ட அளவிலான தேர்வாக நடத்தலாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. 10ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு வினாத்தாளை எளிமையாக்கி தேர்வுகளை நடத்துவது குறித்தும் முடிவு செய்யப்பட உள்ளது. மேலும் நடப்பு கல்வியாண்டில் ஜூன் மாதம் வரை பள்ளி வேலை நாட்கள் நீட்டிக்கப்பட்டால், அம்மாதத்தில் தேர்வு நடத்துவது அல்லது திருப்புதல் தேர்வு மதிப்பெண்களை பொதுத்தேர்வு முடிவாக வெளியிடுவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்