தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது.
பொதுத்தேர்வு:
மாணவர்களின் எதிர்கால வாழ்வில் தாங்கள் நினைத்தபடி சிறப்பாக அமைப்பதற்கு முக்கிய அடித்தளமாக இருப்பது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் ஆகும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் உயர் மதிப்பெண்களை பெற்றால் மட்டுமே பதினோராம் வகுப்பில் தங்களுக்கு பிடித்த பாடப்பகுதியை தேர்வு செய்ய முடியும். ஆனால் சமீப காலமாக பொதுத்தேர்வுகளில் அதிகமானவர்கள் கலந்து கொள்ளாமல் இருப்பது வழக்கமாகிவிட்டது.
சைனிக் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பு – சம்பளம்: ரூ.65,554/- || உடனே விண்ணப்பியுங்கள்!
அந்த வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26 ஆம் தேதியான இன்று முதல் பொதுத் தேர்வு தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. திட்டமிட்டபடி இன்று காலை தேர்வுகள் தொடங்கிய நிலையில் தமிழ் தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 9 லட்சத்து 26 ஆயிரம் மாணவர்கள் தேர்வுக்கு பதிவு செய்திருந்த நிலையில் 17,633 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை என்று தகவல்கள் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.