கியூ ஆர் கோடு மூலமாக செயல்படுத்தப்படும் பண பரிவர்த்தனையின் அளவை அதிகரிக்க ஓ சி பி சி வங்கி திட்டமிட்டுள்ளது.
கியூ ஆர் கோடு பரிவர்த்தனை:
ஓசி பிசி வங்கியானது சொத்து அடிப்படையில் தென்கிழக்கு ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு க்யூ ஆர் கோடு மூலமாக பணப்பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ஆக உயர்த்துவதற்கு வங்கி திட்டமிட்டுள்ளது. சிங்கப்பூர் சுற்றுலா பயணிகளுக்கு இடையில் கடன் அட்டைகள், கடன் பற்று அட்டை ஆகியவற்றின் வரிசையில் கியூஆர் கோடு மூலம் பணம் அனுப்புவதையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
TNPSC Group II நேர்காணல் பட்டியல் – சற்றுமுன் வெளியீடு!
இதற்காக அலிபே பிளஸ், யூனியன் பே இன்டர்நேஷனல், தாய்லாந்தின் பிராண்ட் பே, மலேசியாவின் டூயட் நவ், இந்தோனேசியாவின் குயிக் ரெஸ்பான்ஸ் கோடு, இந்தோனேசியா ஸ்டான்டர்ட் என்ற ஐந்து விதமான கியூ ஆர் குறியீட்டு அமைப்புகளுடன் ஓசிபிசி வங்கியானது மின் இயக்க செயலி வாயிலாக ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த ஆண்டு க்யூ ஆர் கோடு மூலம் வாயிலாக வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் மாதாந்திர எண்ணிக்கை சராசரியாக 65 விழுக்காடு என்ற அளவில் அதிகரித்ததாகவும், இந்த எண்ணிக்கை மேலும் வளரும் என்று ஓசி பிசி வங்கி எதிர்பார்ப்பில் உள்ளது.