திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட ஹாப்பி நியூஸ் – ஒரு கோடியை தாண்டிய காணிக்கை!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய தொகை ஒரே நாளில் கோடியை தாண்டி விட்டதால் ஆலயத்தின் தேவஸ்தான நிர்வாகம் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளது.
திருப்பதி ஏழுமலையான்:
நாட்டில் நிலவி வந்த கொரோனா தொற்றின் காரணமாக திருப்பதி ஏழுமலை கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய மக்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. ஆனால் ஒரு சில கால கட்டத்திற்கு பிறகு ஊரடங்கில் நிறைய தளர்வுகளை தெலுங்கானா மாநிலம் கொண்டு வந்தது. அதனை பயன்படுத்தி திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கு ஆன்லைனில் டிக்கெட்களை விநியோகம் செய்து வந்தனர். ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்கள் விற்று வருகிறது. ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய் 300 எனவும் கூறியிருந்தார்.
தமிழகத்தில் 8வது படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இது தவிர நேரில் சென்று இலவச டிக்கெட்கள் வாங்கும் வசதியும் உள்ளது. மேலும் இந்த இலவச தரிசனத்திற்கு டோக்கன்களும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த டோக்கன்களை திருப்பதியில் உள்ள பூதேவி வளாகம், சீனிவாசம் வளாகம் மற்றும் ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி சத்திரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கவுண்டர்களில் பெற்றுக் கொள்ளலாம். இந்த டோக்கன்கள் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்தல் மற்றும் நேரில் சென்றும் டிக்கெட்களை பெற்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நாளுக்கு நாளுக்கு அதிகமாக வந்த வண்ணம் உள்ளனர். நேற்று முன்தினம் மட்டுமே 80 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் அன்று மட்டும் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ஒரே நாளில் 5.13 கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது. அதனை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்களின் எண்ணிக்கை முதலில் இருந்த அளவை விட கூட ஆரம்பித்து உள்ளது. அது மட்டுமல்லாமல் உண்டியல் காணிக்கையும் அதிகமாகியுள்ளதால் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது.