திருப்பதி ஏழுமலையான் கோயில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையிலல் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான தரிசன டோக்கன் நாளை ஆன்லைனில் வெளியிடப்படும் என்று திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி கோவில்:
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆன்லைன் மூலமாக 2 ஆண்டுகளாக வராத மக்கள் தற்போது பதிவு செய்து வருகின்றனர். இதற்கு முன்பு இலவச தரிசன டோக்கன்கள், ஆன்லைன் வாயிலாக ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள், விஐபிகளுக்கும், அவர்களின் பரிந்துரை கடிதங்களின் மூலமும் சிறப்பு தரிசனம், விவிஐபி தரிசனம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வந்தன.
Post Office இல் மாதம் ரூ.5000 கிடைக்கும் சேமிப்பு திட்டம் – MIS முழு விபரங்கள் இதோ!
மேலும் தற்போது கொரோனா பரவல் குறைத்துள்ளதை அடுத்து பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். அதனால் ஆன்லைனில் டிக்கெட் கிடைக்காமல் மக்கள் சிரமத்தில் இருக்கின்றனர். ஒவ்வொரு மாதத்திற்கும் முன் கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்ய கவுண்டர்கள் திறக்கப்படுகின்றன. ஆனால் அது திறந்து சில மாதங்களில் அது விரைவாக புக் செய்யப்படுகின்றனர். இந்நிலையில் தற்போது ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான தரிசன டிக்கெட் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
Exams Daily Mobile App Download
அதன் படி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான தரிசன டோக்கன் நாளை ஆன்லைனில் வெளியிடப்படும் என்று திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான ரூ.300 ஸ்பெஷல் என்ட்ரி டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்படும் எனவும், தரிசன டிக்கெட் பதிவு செய்து பெற்ற பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் 22 ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்படும் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.