Post Office இல் மாதம் ரூ.5000 கிடைக்கும் சேமிப்பு திட்டம் – MIS முழு விபரங்கள் இதோ!
இந்திய அஞ்சல் துறையில் தற்போது தேசிய மாதாந்திர சேமிப்பு வருவாய் (MIS) என்கிற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக ஒரு மாதத்திற்கு மட்டும் ரூ.5,000 வரைக்கும் வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
அஞ்சல் துறை சேமிப்பு:
இந்திய அஞ்சல் துறை நாட்டு மக்களுக்காக சில சிறப்பான நலத்திட்டங்களை செய்து கொண்டிருக்கிறது. பெரும்பாலும் மக்கள் வங்கிகளில் பணம் சேமிப்பதை விட அஞ்சல் துறை சேமிப்பு திட்டங்களில் இணைய தான் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்திய அஞ்சல் துறை தற்போது தேசிய மாதாந்திர சேமிப்பு வருவாய் (MIS) என்கிற ஒரு திட்டத்தை செயல்படுத்தி கொண்டிருக்கிறது. தேசிய மாதாந்திர சேமிப்பு வருவாய் திட்டத்தின் மூலமாக தனிநபர் அல்லது ஜாயிண்ட் அக்கவுண்ட்டாக திறந்து கொள்ளலாம்.
அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இந்த விஷயத்தை தெரிந்து கொள்வது கட்டாயம்!
தனிநபர் கணக்கின் மூலமாக இந்த திட்டத்தில் ரூ.4.5 லட்சம் வரைக்கும் கூட டெபாசிட் செய்து கொள்ளலாம். ஜாயிண்ட் அக்கவுண்ட் மூலமாக இந்த திட்டத்தில் ரூ.9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். கடந்த டிசம்பர் 13ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய மாதாந்திர சேமிப்பு வருவாய் திட்டத்திற்கு 6.6 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தில் ரூ.9 லட்சம் முதலீடு செய்தால் 6.6 சதவீத வட்டி விகிதத்தின் மூலமாக ஆண்டுக்கு மட்டுமே ரூ.59,400 வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஒரு மாதத்திற்கு மட்டுமே ரூ.4,950 வருமானம் கிடைக்கலாம்.
Exams Daily Mobile App Download
மேலும் தனிநபர் அக்கவுண்ட் மூலமாக 6.6 சதவீத வட்டி விகிதத்தின் அடிப்படையில் மாதந்தோறும் ரூ.2,475 வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. தேசிய மாதாந்திர சேமிப்பு வருவாய் திட்டத்தில் சேர விரும்புவர்களுக்கு ஏற்கனவே அஞ்சல் நிலையத்தில் சேமிப்பு அக்கவுண்ட் இருக்க வேண்டும். இதில் குறைந்தது ரூ.1000 முதல் செய்து கொள்ளலாம். 10 வயதிற்கு மேற்பட்ட அனைத்து சிறுவர்களுமே MIS திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். ஆனால், 18 வயது நிரம்பிய பிறகே இந்த திட்டத்திற்கான பலன்களை பெற முடியும்.