தமிழக ரேஷன் கடைகளில் 4,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை!
தமிழக ரேஷன் கடைகளில் உள்ள 4,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ம் வகுப்பு கல்வித் தகுதியுடையவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் அனைத்து அரசு துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. மேலும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான TNPSC போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பும் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது குரூப் 2 தேர்வின் விண்ணப்பப் பதிவுகள் முடிவடைந்துள்ளது. தேர்வு மே 21ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற துறைகளை தொடர்ந்து ரேஷன் கடைகளிலும் காலிப்பணியிடங்கள் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் சமையல் உபயோகப் பொருட்களை மலிவு விலையில் பெற்று வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் நிலவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களின் நலன் கருதி திமுக தலைமையிலான அரசு கொரோனா நிவாரண நிதி மற்றும் இலவசமாக மளிகை பொருட்களை வழங்கியது. மேலும் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் 21 வகையான மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த நேரத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் பற்றாக்குறையால் பொருட்கள் விநியோகம் செய்யும் பணிகள் தாமதமானது. அதனால் பணியில் உள்ள ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்க காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
எம்.எஸ்.தோனி இந்த வருட IPL லில் விளையாட வாய்ப்பு இல்லை ? – ரசிகர்களுக்கு அடுத்த ஷாக்..!
இதனையடுத்து ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 4,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. விற்பனையாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கு நேர்காணல் மூலமாக பணி நியமனம் செய்யப்படவுள்ளனர். 8ம் வகுப்பு தகுதி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் விரைவில் இதற்கான விண்ணப்பப் படிவங்கள் வெளியிடப்படும் என்று உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.