எம்.எஸ்.தோனி இந்த வருட IPL லில் விளையாட வாய்ப்பு இல்லை ? – ரசிகர்களுக்கு அடுத்த ஷாக்..!
எம்.எஸ்.தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா செயல்படுவார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதனால் கேப்டன் தோனியின் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளார்கள். மேலும் இது தொடர்பான தகவல்களைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
புதிய கேப்டன்
எம்.எஸ்.தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்தார். மேலும் 40 வயதுடைய தோனி கடந்த 2 சீசன்களாக மிகவும் மோசமான ஃபார்மில் இருந்தார். அத்துடன் கடந்த சீசனில் நடைபெற்ற 16 போட்டிகளில் 114 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். ஆனால் கேப்டன் பதவியை மட்டும் தன்னிடம் தக்க வைத்துக் கொண்டார். மேலும் கேப்டன் தோனி கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தனது அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுத்தார். அப்பொழுது தனது ஓய்வு பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
தற்போது மகேந்திர சிங் தோனி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தோனி எப்போதும் இளைய தலைமுறைக்கு முக்கியத்துவம் கொடுப்பார். அதன்படி ஒரு இளம் வீரருக்குக்கு தனது இடத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அத்துடன் தன்னால் முடியவில்லை என்றால் எந்தவித ஈகோவும் பார்க்காமல் தானாகவே ஒதுங்கி விடுவார். இதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா செயல்படுவார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் ஐபிஎல் 15வது சீசனில் முதல் போட்டியில் மகேந்திர சிங் தோனி விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மேன் ஆகவும் இருப்பார் என்றும் ரவீந்திரசிங் அனிருத்சிங் ஜடேஜா கேப்டனாகவும் செயல்படுவர் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஐபிஎல் தொடரில் முதல் முறையாக தோனிக்கு ப்ளேயிங் 11ல் இடம் கிடைக்காமல் வெளியேற்றப்பட உள்ளார். அதனால் மகேந்திர சிங் தோனியின் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளார்கள். ஐபிஎல் 15வது சீசன் தொடர் வருகிற மார்ச் 26ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சென்னை – கொல்கத்தா அணிகள் மோத இருகின்றன. இந்த சீசன் தான் மகேந்திர சிங் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.