கள்ளக்குறிச்சி விவகாரத்தை தொடர்ந்து 2வது மாடியிலிருந்து குதித்த மாணவி – அதிர்ச்சியில் மக்கள்!
தமிழகத்தில் கடந்த 7 நாட்களில் பள்ளி மாணவர்கள் 3 பேர் பள்ளி வளாகத்திலேயே தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மீண்டும் 9ம் வகுப்பு மாணவி, பள்ளி வளாகத்திலேயே தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதிர்ச்சி சம்பவங்கள்:
தமிழகத்தில் கடந்த ஜூலை 13ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்துவந்த மாணவி, பள்ளியின் 3வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இருப்பினும் இந்த மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறிவரும் நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது. பல திருப்பங்களுடன் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடந்து வருகிறது. இந்த சூழலில் சேலம் மாவட்டம், மேச்சேரி, அமரம் கிராமத்தை சேர்ந்த மாதேசன் காமாட்சி தம்பதியின் 16 வயது மகள் கோகிலாவாணி.
Exams Daily Mobile App Download
இவர் மேச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜூலை 18ம் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவி, பள்ளியின் 2வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மாணவி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் செயல்படும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆர்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிராம்- ரோஸ்லின் தம்பதியின் மகன் இஷிகாந்த் (வயது 16). இவர் 11ம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த 19ம் தேதி, இஷிகாந்த் பள்ளியின் 2வது மாடியில் இருந்து கீழே குதித்து உள்ளார். மேலும் காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – அமைச்சர் பேட்டி!
இந்த சம்பவம் குறித்த முதல்கட்ட விசாரணையில் பள்ளி ஆசிரியர் மாணவனை அடித்ததால் மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சமயத்தில் நான்காவதாக ஒரு மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ள சம்பவம் பொதுமக்களை மீண்டும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதாவது மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவி இன்று தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். பள்ளி கட்டடத்தின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி பலத்த காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.