தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – அமைச்சர் பேட்டி!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்றனர். அக்கூட்டத்தில் ஆசிரியர்களுக்கு அமைச்சர் முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.
ஆய்வு கூட்டம்:
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியார் பள்ளியில் நடைபெற்ற சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த அம்மூரில் உள்ள தனியார் பள்ளியில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பின்பற்றப்பட வேண்டிய முக்கிய வழிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எடுத்துரைத்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்கள் தங்களது தன்னம்பிக்கையை இழந்து விடுவதால் தற்கொலை எண்ணத்திற்கு செல்லும் அளவிற்கு போய் விடுகிறார்கள். மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே வாழ்க்கை இல்லை.
Exams Daily Mobile App Download
அதனை தாண்டி தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதும் அவசியம். அதனால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்க வேண்டும். மேலும் ஆசிரியர்கள் தங்களது பிள்ளைகளைப் போல மாணவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற வேண்டும் என்பதை மட்டும் நோக்கமாக கொண்டு செயல்பட கூடாது. ஆசிரியர்கள் மதிப்பெண் சுமையை மாணவர்கள் மீது செலுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். நம் மாநிலத்தின் எதிர்காலம் மாணவர்கள் என்பதை கருத்தில் கொண்டு தான் அரசு கல்வி சுகாதாரத்திற்கு அதிகம் முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் நாளை (ஜூலை 22) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!
தொடர்ந்து பேசிய கல்வித்துறை அமைச்சர் கள்ளக்குறிச்சி விவகாரத்தை குறிப்பிட்டு அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார். இனி தமிழக தனியார் பள்ளிகளில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். தற்போது சம்பவம் நடைபெற்ற பள்ளியில் மாணவர்களின் கல்வி பாதிப்படையா வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.