மாநிலத்தில் இனி பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் – அரசு முக்கிய உத்தரவு!
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தினால் டெல்லி, உத்தரப்பிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில் மாஸ்க் அணியும்படி அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது பஞ்சாபிலும் மாஸ்க் அணியும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்:
உலகம் முழுவதுமே கடந்த இரண்டரை ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசும் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதாவது, முழு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மக்களை அவசியமில்லாமல் பொது இடங்களில் நடமாட விடாமலும், கூட்டம் கூட விடாமல் எச்சரித்தனர். மேலும், பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.
பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2022- விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!
மக்கள் அரசின் கட்டுப்பாடுகளை ஓரளவுக்கு பின்பற்றியதால் தான் கொரோனா பரவல் குறைய ஆரம்பித்தது. இந்நிலையில், சீனா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. மற்ற நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா பரவல் தற்போது அதிகரிக்க துவங்கியுள்ளது. மூன்றாம் அலையை தாண்டி மீண்டும் நான்காம் அலை வந்துவிட்டதோ என மக்கள் பீதியடைந்துள்ளனர். கொரோனா பரவல் குறைந்து வந்த நேரத்தில் அனைத்து மாநிலங்களிலும் மாஸ்க் அணிய தேவையில்லை. விருப்பத்தின் பேரில் அணிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
ExamsDaily Mobile App Download
ஆனால், தற்போது கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தாறுமாறாக உயர்ந்து கொண்டே செல்வதால் மீண்டும் மாஸ்க் அணியும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, டெல்லி, உத்தரப்பிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில் மாஸ்க் அணியும்படி அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பஞ்சாபிலும் மாஸ்க் அணியும் படி பஞ்சாபிய அரசு அறிவித்துள்ளது. மாஸ்க் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.