மாநில அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1 முதல் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – முதல்வர் உத்தரவு!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1 முதல் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - முதல்வர் உத்தரவு!
மாநில அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1 முதல் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - முதல்வர் உத்தரவு!
மாநில அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1 முதல் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – முதல்வர் உத்தரவு!

அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004 ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை அரசு ரத்து செய்துள்ளது. அதனால் ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

பழைய ஓய்வூதிய திட்டம்

இந்தியாவில் அரசு ஊழியர்களின் பணிக்காலம் நிறைவடையும் போது அவர்களுக்கு ஓய்வூதிய தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இந்த தொகையானது அவர்களின் முதிர்வு காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த நடைமுறையை கடந்த 2004ம் ஆண்டு மத்திய அரசு மாற்றியுள்ளது. தற்போது ஓய்வூதியம் மாதந்தோறும் வழங்கப்படாமல் மொத்தமாக ஒரே தவணையில் வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்யப்பட்டு அவர்களின் PF கணக்கின் கீழ் சேமிக்கப்படுகிறது.

நாமக்கல்லில் நாளை (மார்ச் 24) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

மேலும் இந்த தொகையுடன் அரசு சார்பாகவும் கூடுதல் தொகையை செலுத்தப்படுகிறது. இவ்வாறு PF கணக்கில் சேமிக்கப்படும் தொகையானது அவர்களின் பணிக்காலம் நிறைவடையும் போது மொத்தமாக வழங்கப்படும் என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனெனில் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியரின் மரணத்திற்கு பிறகு குடும்பத்தினருக்கும் மாதாந்திர ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட பலன்கள் கிடைப்பதில்லை.

நாமக்கல்லில் நாளை (மார்ச் 24) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அதனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் சங்கமும் மற்றும் ஆசிரியர் சங்கமும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் நிதிநிலை அறிக்கையில் ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஊழியர்களுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

NPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!