நாமக்கல்லில் நாளை (மார்ச் 24) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் நாமக்கல் உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் நண்பகல் 2 மணி வரை நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் மின் இணைப்பில் அவ்வப்போது பழுதுகள் ஏற்பட்டுவிடுவதால் பல்வேறு பகுதிகளில் மின் கசிவு மற்றும் மின் இணைப்பு துண்டிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. இதன் காரணமாக பல பகுதிகளில் எதிர்பாராத விதமாக பல்வேறு விபத்துகள் நிகழ்ந்து வருகிறது. அதிலும் இரவு நேரங்களில் தான் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த மின்தடை மற்றும் மின்கசிவினை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை தமிழக அரசால் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு மாதமும் மின்தடை அறிவிக்கப்பட்டு மின்சாதனங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
மார்ச் 25 முதல் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அரசின் திடீர் முடிவு
அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரி மின் துண்டிப்பு செய்யப்படுவதில்லை. ஒவ்வொரு பகுதிகளிலும் வேறு வேறு தினங்களில் மின் துண்டிப்பு செய்யப்படுகிறது. மேலும், மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் முன்கூட்டியே மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நாளை நாமக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செய்யப்படவுள்ளதால் நாமக்கல் மாவட்டத்தில் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளாக, நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிச்செட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி என்ஜிஓஓ காலனி, வீசாணம், சின்ன முதலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.