கடை வேலைகளை இழுத்து போட்டு செய்யும் தனம் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிர் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார், மேலும் மூர்த்தியும் வீட்டில் ஓய்வில் உள்ளார். இந்நிலையில் இனி கடை வேலைகளை தனம் பார்க்க சென்றுவிட்டார். மேலும் இன்றைய எபிசோடில் என்ன நடக்கும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
இன்றைய எபிசோட்:
விஜய் தொலைக்காட்சியில் 2018ம் ஆண்டு முதல் ஒளிபரப்பப்பட்டு வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடர் ப்ரைம் டைமில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். மேலும் குடும்பத்தில் மீனா அப்பாவால் வந்த சண்டையால் கதிர் முல்லையை கூட்டிக்கொண்டு வீட்டை விட்டு கோபத்துடன் வெளியே சென்றுவிட்டார். கதிர் – முல்லை வீட்டை விட்டு போன அன்று இரவே மூர்த்திக்கு நெஞ்சு வலி வந்து விட்டது.
Exams Daily Mobile App Download
பின்பு மூர்த்திக்கு 2 ஆப்ரேஷன் கட்டாயம் செய்ய வேண்டும் என டாக்டர் கூறிவிட்டார். மேலும் ஆபரேஷன் முடிந்து மூர்த்தி வீட்டுக்கு திரும்பிவிட்டார். இதையடுத்து மூர்த்தி வீட்டில் ஓய்வில் இருப்பதால், சூப்பர் மார்கெட்டை ஜீவா ஒருவராக இருந்து பார்த்து வருகிறார். இதை நினைத்து மூர்த்தி தனத்திடம் சொல்லி வருத்தப்படுகிறார். இதை கேட்டு தனம், நானும் இனி கடைக்கு போறேன், ஜீவாக்கு உதவியாக இருக்கிறேன் என்று கூறுகிறார். மேலும் மீனா மற்றும் ஐஸ்வர்யா வீட்டில் இருந்து குழந்தைகளை பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்கிறார்கள்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் – அரசின் திடீர் அறிவிப்பு!
மேலும் தனம் மூர்த்தியிடம் சொல்லிவிட்டு தன்னுடைய வண்டியை எடுத்துக் கொண்டு கடைக்கு சென்று அங்கே மூர்த்தி இடத்தில் இருந்து எல்லா வேலைகளையும் பொறுப்புடன் எடுத்து செய்கிறார் . இதை பார்த்து ஜீவா சந்தோசப்படுகிறார். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் கதிர் ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்து இருக்கிறார். அங்கே கடுமையாக வேலை இருக்கிறது. அதை எல்லாம் பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் தன்னுடைய முழு உழைப்பையும் போட்டு வேலை செய்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் மீனா, தனத்திடம் என்னால இரண்டு குழந்தைகளையும் பார்த்து கொள்ள முடியல அக்கா, நீங்க இருந்தா குழந்தைகள் சமத்தா இருப்பாங்க, என்கிட்ட வாலாட்டுறாங்க என்று மீனா புலம்புகிறார். அடுத்து என்ன நடக்கும் என்பதை வரும் எபிசோடில் பார்க்கலாம்.