ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் – அரசின் திடீர் அறிவிப்பு!
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அந்தியோதயா திட்டத்தில் இணைந்துள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவசமாக மூன்று கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் எனவும், அதற்கு சில நிபந்தனைகளையும் அரசு விதித்துள்ளது.
இலவச கேஸ் சிலிண்டர்:
உலகம் முழுவதுமே சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், அந்தியோதயா திட்டத்தில் இணைந்துள்ளவர்களுக்கு ஆண்டுதோறும் மூன்று எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் அரசுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும் என்றாலும் கூட ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த இலவச சிலிண்டர்களை பெறுவதற்கு சில நிபந்தனைகளையும் அரசு விதித்துள்ளது.
Exams Daily Mobile App Download
அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும் தான் இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதாவது, சம்மந்தப்பட்ட ரேஷன் கார்டுதாரர் உத்தரகண்ட் மாநிலத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் மற்றும் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் கட்டாயமாக ரேஷன் அட்டையை கேஸ் இணைப்பு அட்டையுடன் இணைந்திருக்க வேண்டும். அதாவது, அந்தியோதயா அட்டையுடன் கேஸ் இணைப்பு அட்டையை இணைக்கவில்லை என்றால் இலவச சிலிண்டர்கள் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
PM கிசான் திட்டத்தின் 12வது தவணைப்பணம் எப்போது வெளியீடு? முழு விவரம் இதோ!
இந்நிலையில், மாவட்ட வாரியாக அந்தியோதயா திட்டத்தில் இணைந்துள்ளவர்களின் பட்டியல் கேஸ் ஏஜென்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, அந்தியோதயா கார்டுதாரர்களின் கேஸ் இணைப்பை இணைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டம் அமலுக்கு வந்த பிறகு கிட்டதட்ட 2 லட்சம் அந்தியோதயா அட்டைதாரர்கள் இலவச கேஸ் சிலிண்டர் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த இலவச கேஸ் சிலிண்டர் திட்டத்தின் மூலமாக உத்தரகாண்ட் அரசாங்கத்திற்கு 55 கோடி ரூபாய் இழப்பீடு எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.