‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை? வைரலாகும் தகவல்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை? வைரலாகும் தகவல்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை? வைரலாகும் தகவல்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை? வைரலாகும் தகவல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய திருப்பம் ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில எபிசோடுகளில் விறுவிறுப்பு குறைந்து உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்திருந்த நிலையில் தற்போது வர இருக்கும் புதிய களத்தை மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் நல்ல இடம் பிடித்து வருகிறது. கடந்த சில எபிசோடுகளில் கதிர் வீட்டை விட்டு வெளியேறி புதிய ஹோட்டல் தொடங்குவது குறித்த காட்சிகள் இடம் பெற்றன. இதையடுத்து ஹோட்டல் தொடங்கிய முதல் நாளில் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த நிலையில் முல்லையின் அக்கா மல்லி கதிரிடம் வியாபாரத்தில் நல்ல நிலைக்கு வருமாறு சவால் விடுகிறார். மேலும் பதிலுக்கு கதிரும் சவால் விடுகிறார். இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா புதிதாக பியூட்டி பார்லர் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

இதனால் கதையில் அடுத்து என்ன நிகழும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஏனென்றால் ஐஸ்வர்யா சொந்த தொழில் தொடங்குவதால் இதனை வைத்து மீனா சண்டை போடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை வைத்தே இன்னும் ஒரு மாதத்திற்கு சீரியல் போகும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் கதையில் எதிர்பாராத ட்விஸ்ட் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சீரியலில் மூர்த்தியின் அம்மாவாக நடிகை ஷீலா நடித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு சீரியலில் திடீர் திருப்பமாக இவர் இறப்பது போல் கதை மாற்றப்பட்டது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் திடீரென்று இவர் மீண்டும் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்தியாவில் அரசாங்க சான்றிதழ்களை பெற புதிய விதிமுறை – அரசு அதிரடி அறிவிப்பு!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ஷூட்டிங் ஸ்பார்ட்டில் தனமும், ஷீலாவும் இணைந்து எடுத்து கொண்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சீரியலில் லட்சுமி அம்மா இறந்த நிலையில், அவர் அடிக்கடி தனத்தின் கனவில் வந்து பேசுவது போல் காட்சிகள் சீரியலில் இடம் பெற்று வருகின்றன. இதனை அடுத்து லட்சுமி அம்மா மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள நபர்களின் கனவில் வந்து பேசுவது போல் காட்சிகள் இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!