தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் – முதல்வருக்கு நன்றி தெரிவித்த பெண்கள்!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பொருளாதார ரீதியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சாமானிய மக்களுக்கு உதவிபுரியும் வகையில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மீண்டும் தமிழக முதலமைச்சர் தொடங்கியுள்ளார்.
தாலிக்கு தங்கம் திட்டம்:
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு அரசு செயற்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக பெண்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் திருமணத்திற்கு உதவிபுரியும் வகையில் தாலிக்கு தங்கம் திட்டம் உள்ளது. இத்திட்டம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் என்ற பெயரில் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் மூலமாக 10ம் வகுப்பு படித்த மணப்பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.25,000 மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கபடுகிறது.
மத்திய அரசு ஊழியர்களின் கவனத்திற்கு – ஆவணங்களை பாதுகாக்க அறிவுறுத்தல்!
அத்துடன் 12ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படித்த பெண்களுக்கு உதவித் தொகையாக ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கபடுகிறது. இத்திட்டத்தின் மூலமாக பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த பெண்கள் திருமணம் செய்து கொள்ள மிகவும் பயன் பெற்றனர். மேலும் இதற்கு விண்ணப்பிக்க ஆண்டு வருமானம் ரூ.72000க்குள் இருக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பிக்கும் மணமகள் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதே போல் மணமகன் 21 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வீட்டு வாடகைப்படி உயர்வு!
இத்திட்டத்திற்கு ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டம் கடந்த சில ஆண்டுகளாக நிதியின்மை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஏராளமான பெண்கள் தாலிக்கு தங்கம் கோரி அரசிடம் மனு அளித்துள்ளனர். இதையடுத்து பெண்களுக்காக நிறுத்தப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மீண்டும் தொடங்கி வைத்துள்ளார். அதனால் இந்த அறிவிப்பை அறிந்த ஏராளமான பெண்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.