தமிழகத்தில் மீண்டும் கல்லூரிகள் திறப்பு எப்போது? ஆன்லைன் தேர்வுகளுக்கு அரசு அனுமதி!

0
தமிழகத்தில் மீண்டும் கல்லூரிகள் திறப்பு எப்போது? ஆன்லைன் தேர்வுகளுக்கு அரசு அனுமதி!
தமிழகத்தில் மீண்டும் கல்லூரிகள் திறப்பு எப்போது? ஆன்லைன் தேர்வுகளுக்கு அரசு அனுமதி!
தமிழகத்தில் மீண்டும் கல்லூரிகள் திறப்பு எப்போது? ஆன்லைன் தேர்வுகளுக்கு அரசு அனுமதி!

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து முக்கிய அறிவிப்பை தமிழக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

ஆன்லைனில் தேர்வு:

தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் முறையிலலேயே நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் கொரோனா பெருந்தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. அவ்வாறு கல்லூரிகள் திறக்கப்பட்டத்தை தொடர்ந்து மாணவர்களுக்கு கடந்த ஆண்டுகளில் ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டதால் மாணவர்களின் கற்றல் குறித்து ஆசிரியர்கள் அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் – முதல்வருக்கு நன்றி தெரிவித்த பெண்கள்!

அதனால் இந்த ஆண்டு அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வுகள் நேரடி முறையில் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் மாதம் நடைபெறும் என்றும் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. ஆனால் மாணவர்கள் நேரடி வகுப்புகள் தொடங்கிய சில நாட்களில் தேர்வுகள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதன் பின்னர் கல்லூரி மாணவர்களுக்கு கால அவகாசம் நீட்டித்து ஜன.20ம் தேதி செமஸ்டர் தேர்வுகள் நேரடி முறையில் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஜன.31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வீட்டு வாடகைப்படி உயர்வு!

மேலும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது காலம் கடந்துள்ளதால் உடனடியாக தேர்வு நடத்த உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் பிப்.1ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்த உள்ளதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆனால் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு நேரடி முறையில் மட்டுமே செமஸ்டர் தேர்வுகள் நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் பிப்.20ம் தேதிக்கு பிறகு கொரோனா தொற்று பரவல் குறைவது அடிப்படையில் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!