மத்திய அரசு ஊழியர்களின் கவனத்திற்கு – ஆவணங்களை பாதுகாக்க அறிவுறுத்தல்!
மத்திய அரசு தனது அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, முக்கியமான ஆவணங்கள் எதையும் சமூக செய்தி பகிர்வு செயலிகள் மூலம் பகிர வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.
மத்திய அரசு அறிவுறுத்தல்:
தற்போதைய நவீன உலகத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி விட்டது. தகவல் தொடர்பு துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் அதிக அளவில் நன்மைகள் உள்ளது. தகவல்கள் எந்த அளவிற்கு விரைவாகவும், எளிமையாகவும் அனுப்பப்படுகிறதோ அந்த அளவிற்கு அதில் பாதுகாப்பும் குறைவாக உள்ளது. டிஜிட்டல் முறையில் தகவல் திருட்டு என்பது மிகவும் பரவலாக சந்திக்கும் விஷயமாகி விட்டது. அதிக ஹேக்கர்கள் இதை தொழிலாக செய்து வருகின்றனர். இதனால் டிஜிட்டல் தளத்தில் தகவல்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல், ரூ.9.5 லட்சம் அபராதம் வசூல் – காவல்துறை அதிரடி நடவடிக்கை!
அரசு பணியாளர்கள் அரசு சம்பந்தப்பட்ட அலுவலக தகவல்களை வெளியில் பகிரக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் உள்ளது. அரசு சம்பந்தப்பட்ட தகவல்கள் வெளியில் தெரியவந்தால் அது மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. இதனால் ரகசியம் காக்கும் உறுதிமொழி அரசு ஊழியர்களுக்கு உள்ளது. முன்னதாக அனைத்து அரசு ஆவணங்களும் காகித முறையில் மட்டுமே சேமிக்கப்படும். ஆனால் தற்போதைய தொழில்நுட்பத்தின் காரணமாக அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்பட்டு பகிரப்படுகிறது.
TNPSC குரூப் 3, 4 VAO காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – புதிய நடைமுறைகள் வெளியீடு!
இந்நிலையில் மத்திய அரசு தனது அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது. அதன்படி, ரகசியமான மற்றும் முக்கிய ஆவணங்களை வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற செயலிகள் மூலம் பகிர வேண்டாம் என்றும், இந்த செயலிகளை தனியார் நிறுவனங்கள் கட்டுப்படுத்துவதால் அவற்றை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது தவிர மத்திய அரசின் அலுவலகங்களில் கூகுள் ஹோம், அலக்ஸா போன்ற டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.