Telegram செயலிக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு! அதிர்ச்சியில் பயனர்கள்!

0
Telegram செயலிக்கு தடை - உச்சநீதிமன்றம் உத்தரவு! அதிர்ச்சியில் பயனர்கள்!
Telegram செயலிக்கு தடை - உச்சநீதிமன்றம் உத்தரவு! அதிர்ச்சியில் பயனர்கள்!
Telegram செயலிக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு! அதிர்ச்சியில் பயனர்கள்!

அதிபர் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், பிரேசில் உச்சநீதிமன்றம் டெலிகிராம் செயலி பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக டெலிகிராம் நிறுவனத்தின் தலைவர் பாவெல் துரோவ் எங்கள் அலட்சியத்திற்காக நான் பிரேசில் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் உத்தரவு:

இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தை தொட்டு உள்ளது. இந்நிலையில் படித்தவர் முதல் படிக்காதவர் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் உபயோகப்படுத்தி வருகின்றனர். இன்று, குடும்பத்தில் நான்கு பேர் இருந்தால், குறைந்தது ஆறு மொபைல் போன்களாவது அவர்கள் வீட்டில் இருக்கும் நிலை ஏறக்குறைய வந்து விட்டது. உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கானவர்கள் குடும்பம், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்கவும் , தகவல்களை பகிர்வதற்கும் வாட்ஸ்அப், கூகுள், ட்விட்டர்,டெலிகிராம் போன்ற செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் வேளாண் பட்டதாரிகளுக்கு ரூ.1 லட்சம் மானியம் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

இந்நிலையில் பிரேசிலில் டெலிகிராம் செயலி பயன்பாட்டிற்கு தடை விதித்து, பிரேசில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவுக்கு காரணம், பிரேசிலில் அதிபர் தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு, டெலிகிராம் செயலியில் குறிப்பிட்ட அரசியல் கட்சியினருக்கு ஆதரவாகவும், மேலும் தவறான கருத்துகளை பகிர்ந்து வருவதாக புகார் எழுந்தது. இந்த புகாரை கருத்தில் கொண்டு அரசு, பொய் செய்திகள் பரப்பப்படுவதை தடுக்க வேண்டுமென டெலிகிராம் செயலி நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்தது.

ஆனால் இந்த எச்சரிக்கை உத்தரவை டெலிகிராம் செயலி நிறுவனம் பெரிதாக கருதாமல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பிரேசில் உச்சநீதிமன்றம் டெலிகிராம் செயலிக்கு தடை விதித்துள்ளது. அதிபர் போல்சனாரோ, டெலிகிராம் செயலி மூலம் , தொண்டர்களோடு தொடர்பில் இருந்து வந்த சூழலில் உச்சநீதிமன்ற தீர்ப்பு அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் வாட்ஸ்அப், கூகுள், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் நாட்டின் சட்டங்களை பின்பற்றுவதாகவும் அதேநேரத்தில் டெலிகிராம் அவற்றை பின்பற்றத் தவறுவதாகவும் தலைவர்கள் அளித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த உச்சநீதிமன்ற உத்தரவிற்கு டெலிகிராம் நிறுவனத்தின் தலைவர் பாவெல் துரோவ் மன்னிப்பு கேட்டு உள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!