தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் – வலுக்கும் கோரிக்கை! அரசின் முடிவு என்ன?
தமிழக அரசு பள்ளிகளில் பகுதி நேரமாக பணிபுரியும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்த அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிட வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பணி நிரந்தரம்:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு நேற்று (மார்ச் 18) சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இதில் பல திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் அதற்கான நிதி போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவினர் ஆட்சிக்கு வந்த பிறகு தாக்கல் செய்த முழு பட்ஜெட் தாக்கல் இதுவாகும். இந்த பட்ஜெட் தாக்கலில் அனைத்து துறை சார்ந்த நிதி ஒதுக்கீடும் இடம் பெற்றது. உயர்கல்வித்துறைக்கு ரூ.5,568 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு ரூ. 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவத் துறைக்கு ரூ.17,901 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
EPFO கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – நாமினியை அப்டேட் செய்வது எப்படி?
இந்த நிலையில் அரசு ஊழியர்கள் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஏமாற்றம் அளித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். ஏனெனில் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்புகள் குறித்து பட்ஜெட் தாக்கலில் ஏதும் இடம்பெறவில்லை. அதனை தொடர்ந்து தற்போது அரசு பள்ளிகளில் பகுதி நேரமாக பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்தும் ஏதும் அறிவிக்கப்படவில்லை என்றும் கூறுகின்றனர். கடந்த 2012 ஆம் ஆண்டு ரூ.5000 ஊதியத்தில் தொகுப்பூதியத்தில் 16 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட்டனர்.
SBI SCO 2022 வேலைவாய்ப்பு – காலியிடங்கள், தகுதி & விண்ணப்பக் கட்டணம் விளக்கம்!
குறைந்த ஊதியத்தால் இவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் விதவை, மாற்றுத்திறனாளிகளும் உள்ளனர். முதல் நாள் பட்ஜெட் கூட்டத் தொடரின் அறிவிப்பில் பகுதி நேர ஆசிரியர்கள் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. அதனால் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு அவ்வாறு பணி நிரந்தரம் செய்தால் 12,000 குடும்பங்கள் வாழும். இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இதற்கான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.