ஆசிரியர் தகுதி வாரியத்தின் 13,331 ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு – முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள 13,331 ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு குறித்தான முக்கிய அறிவிப்பு ஒன்றை ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், சில காலிப்பணியிடங்களுக்கு மட்டும் தான் போட்டித்தேர்வு எனவும் அறிவித்துள்ளது.
போட்டித்தேர்வு
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் என மொத்தமாக 10,331 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த காலிப் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதி வாரியத்தின் மூலமாக தான் நிரப்பப்பட வேண்டும். ஆனால், ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வானவர்களுக்கே இன்னும் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்நிலையில், இந்த கல்வியாண்டில் பல ஆசிரியர்கள் ஓய்வு பெற இருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
ஏற்கனவே பாடங்கள் நடத்த போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த சமயத்தில் இந்த பள்ளி ஆசிரியர்களும் பணி ஓய்வு பெற்று சென்றுவிட்டால் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த ஆசிரியர்களே இல்லாத நிலை ஆகிவிடும். இதனால், இந்த கல்வியாண்டில் ஓய்வு பெற இருக்கும் ஆசிரியர்களுக்கு இந்த கல்வியாண்டு முழுக்க பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், 13,331 காலிப் பணியிடங்களும் தற்காலிகமாக நிரப்ப வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
CBSE 10 & 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் – ஜூலை கடைசி வாரத்தில் வெளியீடு? முழு விவரம் இதோ!
இந்நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கும் போட்டிதேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தகுதி தேர்வாணையம் அறிவித்திருந்தது. ஆனால், 103,331 காலிப் பணியிடங்களுக்கும் போட்டிதேர்வு நடத்தாமல் 8,268 பணியிடங்களுக்கு மட்டும் போட்டித்தேர்வினை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவெடுத்துள்ளது. மேலும், 5,063 பணியிடங்களுக்கு போட்டித்தேர்வில் இருந்து ஆசிரியர் தேர்வு வாரியம் விலக்கு அறிவித்துள்ளது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்