TCS நிறுவனத்தில் ஏராளமான காலிப்பணியிடங்கள் 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
டாடா கன்சல்டன்சி சர்விஸ் லிமிடட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடம் குறித்தான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மே 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TCS நிறுவனம்:
நாட்டின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வரும் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்விஸ் லிமிடட் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக எந்த வேலைவாய்ப்பு குறித்தான அறிவிப்பையும் டாடா நிறுவனம் அறிவிக்கவில்லை. தற்போது புதிதாக பல தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க டாடா கன்சல்டன்சி நிறுவனம் திட்டமிட்டு கொண்டிருக்கிறது. அதே போல தற்போது காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.472 குறைவு – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
B.E./ B.Tech/ M.E./ M.Tech/ MCA/ M.Sc ஆகிய ஏதோ ஒன்றில் பட்டப்படிப்பு முடித்திருந்தாலே இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது மட்டுமல்லாமல் 2020, 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மே 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு என அனைத்திலும் 60% சதவீத மதிப்பெண்ணிற்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
படிப்பை பாதியிலேயே நிறுத்தியிருந்தாலோ, அரியர் வைத்திருந்தாலோ அந்த விண்ணப்பதாரர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி படிப்பில் இடைவெளி இருந்தால் அதை கண்டிப்பாக அறிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச கல்வி இடைவெளி 24 மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்ததற்கான சான்றுகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்பு தான் தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 28 க்குள் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.