சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.472 குறைவு – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,680க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை என்றும் இல்லாத அளவுக்கு குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய தங்கத்தின் விலை பற்றி பார்ப்போம்.
தங்கம் விலை
தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் தங்கத்தை அதிகளவு வாங்க ஆர்வம் கொள்கின்றனர். தங்கத்தின் மீதும் பெரும்பாலானோர் தங்களின் சேமிப்பு பணத்தை முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். ஏனெனில் தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இதனை சேமித்து வைத்து கொண்டு எதிர் காலத்தில் தேவைப்படும் செலவினங்களை சுலபாக எதிர்கொள்ளலாம். மேலும் வங்கிகளில் தங்க நகைகளை அடமானம் வைத்து குறைந்த வட்டிக்கு பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் தங்கத்தை வாங்க வேண்டும் என்று மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – கார்டில் உள்ள குறைகளை தீர்க்க சிறப்பு முகாம்!
அதன் காரணமாக தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட போர் காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.40,000 தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இது நகைப்பிரியர்களுக்கு பேரிடியாக விழுந்தது. இதையடுத்து நேற்று தங்கத்தின் விலை ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,680க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று தங்கத்தின் விலை என்றும் இல்லாத அளவுக்கு சவரனுக்கு ரூ.472 குறைந்து ரூ.38,112க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இதே போல் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.59 குறைந்து ரூ. 4,764க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து இன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.20 குறைந்து ரூ.63.40க்கு விற்பனையாகிறது. அதன்படி ஒரு கிலோ வெள்ளி 63,400 விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். மேலும் இனி வரும் காலங்களில் தங்கத்தின் விலை ஏற்றத்தோடு இருக்கும் என்று கூறப்படுவதால் தங்கத்தை இன்றே வாங்குவது பயனுள்ள சேமிப்பாகும்.