இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க TATA முடிவு? சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கர்னெல் பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ஒரு அறிய சலுகை கிடைந்துள்ளது. அதாவது டாடா கல்வி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளை உதவித்தொகை வழங்க முன் வந்துள்ளது.
உதவித்தொகை:
இந்தியாவில் பழங்குடியினர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், பட்டியலினத்தவர்கள், மாற்று திறனாளி மாணவர்கள் போன்றோர்க்கு அரசு சார்பாக கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இலவச கல்வியும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாடா கல்வி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளையும் கல்வி உதவித்தொகை வழங்க முன் வந்துள்ளது. அமெரிக்காவின் உள்ள கர்னெல் பல்கலைக்கழகம் சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்று. இப்பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு படிப்புகளை வழங்குகிறது. இந்த சிறந்த பல்கலைக்கழகத்தில் சேரலாம் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பல்வேறு நாடுகளில் இருந்தும் விண்ணப்பித்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவின் கர்னெல் பல்கலைக்கழகத்தில் ஆர்க்கிடெக்சர் அண்ட் பிளானிங், இன்ஜினியரிங், அப்ளைடு எகனாமிக் அண்ட் மேனேஜ்மெண்ட், அக்ரிகல்ச்சர், லைப் சயின்சஸ், பயோலஜிக்கல் சயின்சஸ், பிசிக்கல் சயின்சஸ், சோசியல் சயின்சஸ் ஆகிய துறை படிப்புகளில் சேரவிருக்கும் மாணவர்களுக்கு டாடா கல்வி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளை கல்விஉதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த உதவித்தொகை பெற விரும்புவார்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். அமெரிக்காவின் கர்னெல் பல்கலைக்கழகத்தில் மேற்கண்ட துறைகளில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் அட்மிஷன் பெற்றிருக்க வேண்டும்.
உலகளவில் சுகாதார அவசரநிலையா? ஜூன் 23இல் குழு கூட்டம்! அச்சத்தில் பொதுமக்கள்!
மேலும் விண்ணப்பத்துடன் நிதியுதவி தேவைக்கான வேண்டுகோளையும் விடுத்திருக்க வேண்டும் எட்டு செமஸ்டர் வரையிலான இளநிலை பட்டப்படிப்புகளுக்கு கல்வி கட்டணம் வழங்கப்படும். மொத்தம் 20 இந்திய மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. அமெரிக்காவின் கர்னெல் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் அக்டோபர் முதல் நவம்பர் மாதங்களில் உரிய ஆவணங்களுடன், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் தேர்வு செய்யப்படும் மாணவர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும் என்று டாடா கல்வி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.