உலகளவில் சுகாதார அவசரநிலையா? ஜூன் 23இல் குழு கூட்டம்! அச்சத்தில் பொதுமக்கள்!
உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் தற்போது விலங்குகளிடமிருந்து பரவும் குரங்கு அம்மை நோய் மிகவும் வேகமாக பரவி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்நோய் உலகளாவிய சுகாதார அவசரநிலையாக வகைப்படுத்த முடியுமா என்று WHO கூட்டம் ஒன்றை நடத்தி முடிவு செய்யப்பட உள்ளது.
குரங்கு அம்மை
உலக நாடுகளில் சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் என்ற பெருந்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அத்துடன் இந்த வைரஸுக்கெதிராக பல்வேறு வகையான தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து முன்பை விட வீரியம் மிக்கதாக பரவி வருகிறது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து ஓரளவு நம்மை பாதுகாத்து கொள்ள முடிகிறது. இந்த நிலையில் தென் கொரியாவில் குரங்கு அம்மை என்ற விலங்குகளிடமிருந்து பரவும் நோய் கண்டறியப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இது தற்போது 39க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. அத்துடன் இந்த நோய் அதிக அளவில் இளைஞர்களுக்கு ஏற்படக்கூடும் என்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உபயோகப்படுத்திய பொருட்களை பயன்படுத்தினால் பரவலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உலக சுகாதார அமைப்பு இந்நோயை ஒரு “கிரேடு 3 அவசர நிலை” என அறிவித்துள்ளது. அதாவது இந்நிலையில் நாட்டின் அலுவலகங்கள், பிராந்திய அலுவலகங்கள் மற்றும் தலைமையகம் உள்ளிட்ட நிலைகளிலும் தங்களின் பதிலை ஒருங்கிணைத்து வழங்க வேண்டும்.
இதனை தொடர்ந்து குரங்கு அம்மை நோய்க்கு பெரியம்மை நோயின் தடுப்பூசியை செலுத்தலாமா என்று ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளை ஆதரிக்கவும் மற்றும் சோதனை செய்யப்பட்ட பொது சுகாதார கருவிகள் மூலம் பரவலைத் தடுக்கவும் வேண்டும் என்று WHO குறிக்கோளாக கொண்டுள்ளது. மேலும் இந்த நோயை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக வகைப்படுத்த முடியுமா என்று உலக சுகாதார அமைப்பு முடிவு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக வருகிற ஜூன் 23ம் தேதி அன்று அவசரநிலைக் குழுவின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.