தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் – அரசு அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் மே 1ம் தேதி மே தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மது கடைகளுக்கு விடுமுறை:
தமிழக அரசுக்கு மற்ற துறைகளை தொடர்ந்து மது கடைகளும் முக்கிய வருவாயை ஈட்டித் தருகிறது. இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் தொற்றின் போது விதிக்கப்பட்ட ஊரடங்கால் அரசு அனைத்து கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலங்கள், நிறுவனங்கள் என அனைத்தையும் மூட உத்தரவிட்டது. அதே போல மது கடைகளும் இயங்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மது கடைகளில் மது பிரியர்கள் தொற்று பரவும் நேரத்தில் அரசின் நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் இருந்தது பதற்றத்தை ஏற்படுத்தியது.
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் – இதுவரை 18 லட்சம் பேர் பதிவு!
அதனால் மதுக்கடை திறப்பிற்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. இதனால் அரசும் வருவாய் இழப்பை சந்தித்தது. அதே போல இரண்டாம் அலையின் போதும் மதுக்கடைகள் மூடப்பட்டது. அரசின் முயற்சியால் கொரோனா பாதிப்புகள் சற்று குறைந்தததும். பகுதி நேரமாக மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளின் படி மது விற்பனை நடைபெற்று வந்ததது. இந்த நேரங்களில் வழக்கத்தை விட மதுபாட்டிகள் விலை அதிகமாக விற்கப்பட்டது. ஆனாலும் விற்பனை ஏறு முகத்தை சந்தித்தது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து கடந்த மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மது கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. தற்போது மே 1ம் தேதி மே தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் மது கடைகளை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அம்மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், பார்கள், கிளப், நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் மதுபான கூடங்களும் மூடப் பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனை மீறி அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபட்டால் சட்ட விதிகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.