TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் – இதுவரை 18 லட்சம் பேர் பதிவு!

0
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் - இதுவரை 18 லட்சம் பேர் பதிவு!
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் - இதுவரை 18 லட்சம் பேர் பதிவு!
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் – இதுவரை 18 லட்சம் பேர் பதிவு!

தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான TNPSC தேர்வு குறித்த கால அட்டவணை வெளியாகியுள்ளது. இதில் TNPSCயின் இந்த குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் தேர்வர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

குரூப் 4 தேர்வு

தமிழகத்தில் TNPSC தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகள் மூலமாக அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. TNPSC தேர்வாணையம் மூலமாக குரூப் 1, குரூப் 2,2A மற்றும் குரூப் 4 தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் மூலமாக பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக அனைத்து அரசு போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா கட்டுக்குள் உள்ளதால் TNPSC இந்த ஆண்டுக்கான அறிவிப்புகளை அறிவித்துள்ளது. இதில் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பை கடந்த மாத இறுதியில் TNPSC தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டார்.

தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொதுத்தேர்வு விபரங்கள்!

அதன்படி குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று காலை 9.30 மணி முதல் 12 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குரூப் 4 தேர்வு மூலமாக தமிழ்நாடு அமைச்சுப் பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி, தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலகப் பணி, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் தொழில்நுட்ப சார்நிலைப் பணி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சார் நிலைப் பணி உள்ளிட்ட பணியிடத்தில் இருக்கும் சுமார் 7000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexamsin என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் இன்று இரவு 12 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதுவரை தமிழகத்தில் சுமார் 18 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று கடைசி நாள் என்பதால் மேலும் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்வு தொடர்பான கூடுதல் தகவல்களை பெற [email protected] மற்றும் [email protected] என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!