தமிழகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – தேர்தல் ஆணையம் உத்தரவு!
தமிழகத்தில் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை சிறப்பான முறையில் நடத்தும் நோக்கில் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நாளை இரவு வரை டாஸ்மாக் மதுபான கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
மதுக்கடைகள் மூடல்:
தமிழகத்தில் நாளை (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 28ம் தேதி முதல் நடைபெற தொடங்கியது. மேலும் பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கும் மார்ச் 4 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறஉள்ளது. அதனை தொடர்ந்து கடந்த வாரம் இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியானது. பிப்ரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் வெளியிட்டதை அடுத்து தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்றது.
Reliance Jio வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அளவில்லா 3GB டேட்டா திட்டங்கள்!
மேலும் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்துள்ளது. தேர்தலன்று வாக்குரிமை உள்ள அனைவருக்கும் விடுப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. வாக்களிக்க விடுப்பு எடுப்பவர்களுக்கு ஊதிய குறைப்பு மற்றும் ஊதிய பிடித்தம் போன்றவைகள் செய்ய கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தேர்தல் நடைபெறும் நாள் அன்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்றும் மதுக்கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.
Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – புதிய மாற்றங்கள் அறிவிப்பு!
மாநிலம் முழுவதும் தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மது கடைகள் 3 நாட்கள் தொடர்ந்து மூடப்படுவதால் நேற்று முன் தினம் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வரும் 22ம் தேதி வரை மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.