இந்திய IT நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் – இந்த ஆண்டில் 9.9% சம்பள உயர்வு! முழு விவரம் இதோ!
இந்தியாவில் உள்ள அனைத்து தொழில்நுட்ப துறை ஊழியர்களும் இந்த ஆண்டில் 9.9% சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம் என்று ஆய்வுத்தகவல்கள் கூறுகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் விரிவாக காணலாம்.
சம்பள உயர்வு
சமீபத்தில் உலகளாவிய தொழில்முறை சேவை நிறுவனமான Aon அளித்துள்ள சம்பள அதிகரிப்பு கணக்கெடுப்பின்படி, இந்திய IT நிறுவனங்கள் 2022ம் ஆண்டில் 9.9% சம்பள உயர்வை அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த Aon அறிக்கையின்படி, இ-காமர்ஸ், தொழில்நுட்ப (IT) துறைகள், IT ஆல் இயக்கப்பட்ட சேவைகள் (ITeS) மற்றும் வாழ்க்கை அறிவியல் ஆகிய துறைகளில் உள்ள ஊழியர்களுக்கு அதிக அளவு சம்பள உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வு கடந்த 2021 ஆண்டில் 9.3% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – தேர்தல் ஆணையம் உத்தரவு!
இப்போது சம்பள உயர்வு பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு 12.4% சம்பள உயர்வை வழங்கலாம் என்று தெரிகிறது. அதே போல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 2021ல் 11.2% ஆக இருந்த சம்பள உயர்வை, 2022ல் 11.6% ஆக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தொழில்நுட்ப (IT) துறைகளில் கடந்த 2021 ஆம் ஆண்டில், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக 21% உயர்ந்த தேய்வு எண்ணிக்கையும் கணக்கெடுப்பில் பதிவாகியுள்ளது.
Reliance Jio வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அளவில்லா 3GB டேட்டா திட்டங்கள்!
இதற்கிடையில் கொரோனா தொற்றுநோய் அலைகளின் போது, 2022 ஆம் ஆண்டில் BRIC (பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா) நாடுகள் அதிகளவு சம்பள உயர்வை அறிவித்திருக்கிறது. இதில் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இதனை தொடர்ந்து பிரேசில் 5%, ரஷ்யா 6.1%, சீனா 6% என்ற அளவில் ஊதிய உயர்வை அறிவித்துள்ளது. இப்போது 33% நிறுவனங்கள் 5 சதவீத புள்ளிகள் அதிகரிப்புடன் 2022ம் ஆண்டில் இரட்டை இலக்க சம்பள உயர்வை அளிக்கும் என்று அறிக்கை தகவல் கூறுகிறது.