தமிழகத்தில் “இன்றைய தினம்” டாஸ்மாக் கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
தமிழகத்தில்
தமிழகத்தில் "இன்றைய தினம்" டாஸ்மாக் கடைகள் மூடல் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் “இன்றைய தினம்” டாஸ்மாக் கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நாட்டின் 75 வது சுதந்திர தின விழா வருகிற 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதை மீறினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் கடைகள் மூடல்:

இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களை விரட்டி நாம், கடந்த 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திரம் பெற்றோம். இந்தியாவை ஆங்கிலேயர்களிடம் இருந்து காப்பாற்ற ஏராளமான போராட்டங்கள் நடைபெற்றது. அந்த சுதந்திர போராட்டத்தில், உயிர் தியாகம் செய்தவர்களை போற்றும் வகையிலும், இந்தியா சுதந்திர நாடு என பெருமை கொள்ளும் வகையிலும் வருடம்தோறும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடி வருகிறோம்.அதன்படி 2022 ஆகஸ்ட் 15ல் நாம் 75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். 75வது சுதந்திர தினத்தை கடந்த ஓராண்டுகளாக கொண்டாடி வருகிறோம். இதற்காக ‘அசாதி கா அம்ரித் மோட்சாவ்’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்துள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் இந்த சுதந்திர தினத்தை வரும் ஆகஸ்ட் 15ல் வெகுவிமரிசையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு, ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் சிறப்பாக செய்து வருகிறது. அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது 75 வது சுதந்திர தினத்தையொட்டி வீடுகளில் தேசியக்கொடி ஏற்றும்படி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.அதாவது, இந்த ஆண்டு நாம் ‘அசாதி கா அம்ரித் மோட்சாவ்’ நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி இயக்கமாக மாற்றி வலுப்படுத்த வேண்டும். இதனால் ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 வரை வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுங்கள் என பிரதமர் மோடிகூறியுள்ளார்.

இந்தியாவில் ஒரே நாளில் 16,561 பேருக்கு கொரோனா தொற்று – பீதியில் மக்கள்!

இந்நிலையில் தமிழகத்திலும் சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட பல ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் வருகிற 15-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று சுதந்திர தினத்தினை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், கிளப்புகளைச் சார்ந்த பார்கள், ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் பல்வேறு உரிமங்களை கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். மேலும் வரும் திங்கட்கிழமை மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என அறிவிக்கப்படுகிறது. தவறினால், மதுபான விற்பனை விதிமுறைகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!