இந்தியாவில் ஒரே நாளில் 16,561 பேருக்கு கொரோனா தொற்று – பீதியில் மக்கள்!
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டுமே 16,561 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
கொரோனா:
இந்தியாவில் கொரோனா பரவலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்று கொண்டிருக்கிறது. தற்போது வரைக்கும் இந்தியாவில் 4 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தினசரி பாதிப்பும் இந்தியாவில் உயர்ந்து கொண்டே சென்று கொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் பலியானவர்களின் விவரங்களை சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே இந்தியாவில் 16,561 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4,42,23,557ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 49 இறப்புகளும் பதிவாகியுள்ளன. இதனால், நாட்டில் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 5,26,928 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு 18,053 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகும் ஊராட்சிகள் – மத்திய அரசு அதிரடி
மேலும், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,23,535 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது, 0.28% பேர் மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்களை விழிப்புணர்வுடன் இருக்கும்படி சுகாதாரத்துறை எச்சரித்து வருகிறது. மேலும், நேற்று ஒரே நாளில் மட்டுமே 17,72,441 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.