தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!
அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகம், புதுவை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்
தென் மாவட்டங்களில் ஒரு சில நாட்களாக மழை பெய்து கொண்டு வருகிறது.அதை தொடர்ந்து மேலும் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை மையம்,தமிழகத்தில் உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்க விலை – கவலையில் பொது மக்கள்!
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாகை,தஞ்சை,திருவாரூர்,புதுக்கோட்டை,சிவகங்கை,ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதனை தொடர்ந்து, அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகம், புதுவை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று, குமரி கடல் பகுதியில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.