சென்னை: ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்க விலை – கவலையில் பொது மக்கள்!
தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இதனை கண்டு நகை பிரியர்கள் மிகுந்த கஷ்டத்தில் உள்ளன.மக்கள் அனைவரும் நகை வாங்க முடியாமல் திணறி வருகின்றன.
தங்கத்தின் விலை
கடந்த 2 வருட காலமாக கொரோனா தொற்றின் காரணமாக சந்தோஷமான நிகழ்ச்சிகளுக்கு கூட நகை வாங்க முடியாமல் திணறி வந்தன. அதை தொடர்ந்து இந்த வருடம் குறைந்த நிலையில் நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன.அதை தொடர்ந்து இந்த வருடம் ரஷ்யா மற்றும் உக்ரைன் போரால் அந்நாட்டில் இருந்து ஏற்றுமதி, இறக்குமதி அனைத்தும் பாதிப்படைந்துள்ளதால் பங்குச்சந்தை நிலவரம் மிகவும் சரிவடைந்துள்ளது.இதனால் நகையின் விலை அதிகரித்தும், குறைந்தும் வண்ணமே இருந்துள்ளது.
தமிழகத்தில் அரசு பணியாளர்கள் பதவி நீக்கம் குறித்த உத்தரவு? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
கொரோனா மற்றும் உக்ரைன் போரால் 40000 க்கும் மேற்பட்ட அளவுக்கு தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த உக்ரைன் போரால் கச்சா எண்ணெய்,தங்கம் விலை அதிகமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதன் எதிரொலியாக இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. தங்கத்தை வாங்குவதில் பெண்களின் ஆர்வம் எப்போதும் குறைந்ததில்லை.
இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,883 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, நேற்று 39,056 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 8 ரூபாய் அதிகரித்து 39,064 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.71.50 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 71,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.