தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு டாஸ்மாக் கடைகள் மூடல் – காரணம் இது தான்! வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6000 நிவாரணம் வழங்கப்பட இருக்கும் நிலையில், அது குறித்து அன்புமணி ராமதாஸ் முக்கிய கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார்.
வெள்ள நிவாரணம்
தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அரசு சார்பில் ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் சென்னை வெள்ள தடுப்பு நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட 10000 கோடி மதிப்பிலான பணிகளுக்கான வெள்ள அறிக்கை வெளியிட வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த ஒரு வாரத்திற்கு வெள்ள நிவாரணம் வழங்கப்பட இருக்கிறது. அதனால் இந்த மாவட்டங்களில் ஒரு வாரமாவது டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். ஏன் என்றால் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட ரூ.1000 நிவாரணம் எல்லாம் டாஸ்மாக்கிற்கு தான் சென்றது. எனவே அரசு இந்த கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.