பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு அரசின் ரூ.2 லட்சம் உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை!
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படித்து வரும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
உதவித்தொகை அறிவிப்பு:
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ-மாணவிகளுக்கு அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை வழங்க தகுதி உடைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்த உதவித்தொகை பெற மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2022-23-ம் கல்வியாண்டில் புதிதாக உதவித்தொகை பெற விண்ணப்பிக்க மாணவர்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரியை தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 3ம் தேதி கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலங்களுக்கு விடுமுறை – முக்கிய அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
அல்லது உதவித்தொகை பெற https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschemes என்ற இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் அந்தந்த கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்து. அதனை பெற்றுக் கொண்ட கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை வருகிற ஜனவரி மாதம் 31 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தை 0421 2999130 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
tamilnadu-students-2-lakh-scholarship-jan-31-last-date