RBI வெளியிட்ட சில்லறை வர்த்தக டிஜிட்டல் கரன்சி – இந்தியாவில் இன்று முதல் அறிமுகம்!
இந்தியாவில் கடந்த மாதம் 1ம் தேதி நாடு முழுவதும் டிஜிட்டல் கரன்சி சோதனை முறையில் பயன்பாட்டிற்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக ரீடைல் வணிகத்தில் பயன்படுத்தும் டிஜிட்டல் கரன்சியை இன்று ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் கரன்சி:
இன்றைக்கு பெரும்பாலான நாடுகளில் டிஜிட்டல் கரன்சி தான் புழக்கத்தில் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவித்தார். அதன்படி இந்தியாவில் கடந்த நவம்பர் 1ம் தேதி டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
SBI, HDFC, BOB, IDFC, ICICI, UBI உள்ளிட்ட 9 வங்கிகள் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. அப்போது சில்லறை டிஜிட்டல் நாணய பயன்பாடும் விரைவில் தொடங்கப்படும். இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (டிச.01) நாட்டின் பணப் புழக்கத்தை நிர்வகிக்க சோதனை அடிப்படையில் 4 நகரங்களில் சில்லறை வர்த்தக டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்பட்டது.
பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு அரசின் ரூ.2 லட்சம் உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை!
Exams Daily Mobile App Download
முதல் கட்டமாக பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி, ஐடிஎப்சி வங்கி ஆகிய நான்கு வங்கிகளில் சோதனை அடிப்படையில் சில்லறை வர்த்தகத்தில் டிஜிட்டல் கரன்சி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது காகித நாணயத்தை போன்றது என்றும், சாதாரண ரூபாயின் மதிப்பையே கொண்டிருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள சில்லறை வர்த்தக டிஜிட்டல் கரன்சிக்கு ‘e₹-R’ என்ற குறியீடு உருவாக்கப்பட்டுள்ளது.