டிசம்பர் 3ம் தேதி கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலங்களுக்கு விடுமுறை – முக்கிய அறிவிப்பு!

0
டிசம்பர் 3ம் தேதி கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலங்களுக்கு விடுமுறை - முக்கிய அறிவிப்பு!
டிசம்பர் 3ம் தேதி கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலங்களுக்கு விடுமுறை - முக்கிய அறிவிப்பு!
டிசம்பர் 3ம் தேதி கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலங்களுக்கு விடுமுறை – முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி அன்று வெகு சிறப்பாக கோட்டார் தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டாறு தூய சவேரியார் பேராலயம் உலக அளவில் புனித சவேரியாருக்கென முதன்முதலாக எழுப்பப்பட்ட ஆலயமாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 24ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 3ம் தேதி வரை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கமாகும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

இதில் 10ஆம் நாள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி நாளை மறுநாள் (டிச.03) 10ம் நாள் திருவிழாவை முன்னிட்டு காலை 11 மணிக்கு தேர்ப்பவனி வர இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ஆலய வளாகத்துக்குள் மட்டுமே தேர்பவனி வந்தது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் தேர் ஆலயத்தின் வெளிப்புறங்களிலும் பவனி வர இருக்கிறது.

தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு விவகாரம் – அமைச்சரின் விளக்கம்!

Exams Daily Mobile App Download

அதனால் இவ்விழாவை பொதுமக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாட ஏதுவாக நாளை மறுநாள் (டிச.03) அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்ளுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அத்துடன் இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் பொருட்டு ஜனவரி 28 ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!