தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு விவகாரம் – அமைச்சரின் விளக்கம்!
தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆவின் பால் நிறுவனம் குறித்து தற்போது புதிய புகார்கள் எழுந்து வருகிறது. செயற்கையாக குறிப்பிட்ட பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆவின் பால்:
தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் செயற்கையாக உருவாக்கப்பட்ட ரசாயனங்களை கலப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் நிரூபிக்கப்பட்டது. இதனால் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஆவின் நிறுவன பால் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியது. மேலும், தனியார் பாலை விட ஆவின் பால் விலை குறைவாகவும் உள்ளது. இந்நிலையில், ஆவின் நிறுவனத்தின் விலை குறைந்த பச்சை நிற பாக்கெட்டுகள் தான் மக்கள் மத்தியில் அதிகம் விற்பனை ஆகிறது. இதனால் கொழுப்பு நிறைந்த ஆரஞ்சு பால் அதிகம் விற்பனை ஆகாமல் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்.. சனிக்கிழமையும் பள்ளிகள் – மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இதனை தடுக்க ஆவின் அதிகாரிகள் மக்களுக்கு பச்சை நிற பாக்கெட்டுகள் இல்லை என்று கூறி, செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, கொழுப்பு நிறைந்த பாலினை விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி அறிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து பால் வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள், தமிழக மக்களுக்கு பச்சை மற்றும் நீல நிற பால் பாக்கெட்டுகள் தேவைப்படும் அளவுக்கு விநியோகம் செய்யப்படும் என்று விளக்கம் அளித்துள்ளார்.