தமிழகத்தில் இன்று (அக். 27) பள்ளிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கால தாமதமாக தொடங்கப்பட இருக்கும் நிலையில், நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. அதனால் இன்று (அக். 27) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி சில நாட்களாக கனமழை பெய்ததால் சாலையில் கடை வைத்த வியாபாரிகள் சிரமத்தில் இருந்தனர். மேலும் அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த வாரம் வரை கனமழை பெய்தது. இந்நிலையில் நேற்று இரவு தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியது
அதனால் முக்கிய சாலைகள் வெள்ளக்காடாய் மாறியது. மேலும் காலையும் கனமழை தொடர்வதால் இன்று (அக். 27) அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற அக். 29 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்க இருக்கிறது. இந்நிலையில் ஒரு சில மாவட்டங்களில் இன்று முதலே லேசான மழை தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழையால் தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
பசி கொடுமையால் தவிக்கும் கோபி, எழிலிடம் காதலை சொன்ன வர்ஷினி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
இது குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ளார். மேலும் தற்போது தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்