பசி கொடுமையால் தவிக்கும் கோபி, எழிலிடம் காதலை சொன்ன வர்ஷினி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
பசி கொடுமையால் தவிக்கும் கோபி, எழிலிடம் காதலை சொன்ன வர்ஷினி - இன்றைய
பசி கொடுமையால் தவிக்கும் கோபி, எழிலிடம் காதலை சொன்ன வர்ஷினி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
பசி கொடுமையால் தவிக்கும் கோபி, எழிலிடம் காதலை சொன்ன வர்ஷினி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், எழிலிடம் வர்ஷினி தனது காதலை சொல்ல, ஆனால் எழில் அமிர்தாவை காதலிப்பதாக சொல்லி நிராகரிக்கிறார். மறுபக்கம் பாக்கியா சமையல் ஆர்டருக்கு பணம் வாங்கியதால் அனைவருக்கும் பிரியாணி சமைக்கிறார். ஆனால் ராதிகா கோபிக்கு ஓட்ஸ் சமைத்து கொடுக்கிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் சதீஸ் சேர்ந்து படத்திற்கு தேவையான விஷயங்களை பேசிக் கொண்டிருக்க அப்போது வர்ஷினி வருகிறார். வர்ஷினி சதீஸிடம் வேலை ஒன்றை சொல்லி வெளியே அனுப்புகிறார். பின் சதீஸை வெளியே அனுப்புவதற்குள் போதும் போதும் என ஆகிவிட்டது என சொல்ல, எழில் ஏன் இப்படி சொல்றீங்க என கேட்கிறார். பின் வர்ஷினி கொடைக்கானல் எப்படி இருந்தது என கேட்க, குடும்பத்துடன் திடீரென திட்டமிட்டு போனோன் என எழில் சொல்கிறார். அங்கே எடுத்த புகைப்படங்கள் அழகாக இருந்தது என சொல்ல, லொகேஷன் படமா என எழில் கேட்கிறார். இல்லை உங்க படம் என வர்ஷினி சொல்ல நன்றி என எழில் சொல்கிறார்.

பின் வர்ஷினி நான் எல்லாத்தையும் ஓப்பனாக பேசுவேன் அதனால் இப்போது ஒரு விஷயம் சொல்கிறேன். உங்களை எனக்கு மிகவும் பிடித்து இருப்பதாக வர்ஷினி சொல்கிறார். ஆனால் எழில் நான் அமிர்தாவை காதலிக்கிறேன் என சொல்ல, வர்ஷினி அவங்க திருமணம் முடிந்தவர், அதை விடுங்க நான் உங்களை காதலிக்கிறேன் என சொல்கிறார். ஆனால் எழில் எனக்கும் அமிர்தாவுக்கும் உறவு இருப்பதாக சொல்கிறார். அப்போது சதீஸ் வந்துவிட உடனே வர்ஷினி எழுந்து செல்கிறார். பின் சதீஸ் என்னாச்சு என கேட்க ஆனால் எழில் ஒன்றுமில்லை என சொல்கிறார்.

மறுபக்கம் கோபி வேலையை விட்டு வர ராதிகாவும் வீட்டில் இருந்து வேலை செய்து கொண்டிருக்கிறார். பின் கோபி காபி வேண்டும் என நினைக்க ஆனால் ராதிகா ஆர்டர் செய்து சாப்பிடுங்க என சொல்கிறார். அதை கேட்டு கோபி அதிர்ச்சி அடைகிறார். கோபி நீ சமையல் செய்து வைத்திருப்பாய் அதனால் தான் நான் ஆர்டர் செய்யவில்லை என சொல்கிறார். பின் ராதிகாவிடம் பசிப்பதாக சொல்ல அப்போது மயூரா வந்து கணக்கு சொல்லி கொடுக்க சொல்கிறார். கோபி காபி என நினைக்க ஆனால் ராதிகா நான் உடனே சமைக்கிறேன் என சொல்லி கிளம்புகிறார்.

கோபி பசியோடு இருக்க மயூராவிற்கு கணக்கு சொல்லி கொடுக்கிறார். மறுபக்கம் பாக்கியாவிடம் இனியா என்ன சமையல் வாசனை இழுப்பதாக சொல்ல, இனியா வந்து பார்க்கிறார். பாக்கியா அனைவருக்கும் பிரியாணி சமைத்து வைத்திருக்கிறார். பின் கோபி பேசிப்பதாக சொல்ல ராதிகா அப்போது தான் வேலையை முடித்துவிட்டு வருகிறார். பாக்கியா வீட்டில் அனைவரும் பிரியாணி சாப்பிட என்ன ஸ்பெஷல் என அனைவரும் கேட்கின்றனர். அப்போது மண்டபம் ஆர்டரை முடித்ததற்கு பணம் கிடைத்ததாக சொல்ல, எழில் இனிமேல் பெரிய பெரிய ஆர்டர் கிடைக்க போகுது என சொல்கிறார். அனைவரும் பிரியாணியை விரும்பி சாப்பிடுகின்றனர்.

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் புகார்களுக்கு தீர்வு – முக்கிய அறிக்கை வெளியீடு!

கோபிக்கு பிரியாணி வாடை வர மயூரா பிரியாணி வாசனை வருகிறதுல என கேட்கிறார். அப்போது கோபி உன் மம்மி நமக்காக பிரியாணி செய்கிறாள் போல என கோபி சொல்ல, மயூரா மம்மி செய்தால் இப்படி வாசனை வராது என சொல்கிறார். ஆனால் கோபி நம்ம வீட்டில் தான் வாசனை வருகிறது என கேட்கிறார். பின் ராதிகா சாப்பிட கூப்பிட, கோபி பிரியாணி கிடைக்கும் என ஆசையாக செல்கிறார். அங்கே மயூராவிற்கு ஒரு கப், கோபிக்கு ஒரு கப் ராதிகா வைக்க, எதோ சிறப்பாக செய்து இருப்பாள் போல என கோபி நினைக்கிறார். ஆனால் ராதிகா ஓட்ஸ் செய்து வைக்க கோபி அதை பிடிக்காமல் சாப்பிடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!